Wednesday, October 20, 2010

யாழ்தேவி இணையத்தில் பதிவுகளை இணைப்பது எப்படி?!

யாழ்தேவி.கொம் தன்னுடைய இரண்டாவது பதிப்பை புதிய பல வசதிகளுடன் வெளியிட்டுள்ளது. அதில், பதிவுகளை இணைப்பதற்கும் இலகுவான புதிய வழிகளை செய்துள்ளது.

பதிவுகளை இணைக்கும் முறை.

முதலில் உங்களது யாழ்தேவி கணக்கிற்குள் நுழையுங்கள். அதன்பின்னர் உங்களது கணக்கு பக்கத்தில் வலது மூலையில் ப்ரொபைல், ப்ளொக், லிங்க் என்கிற பகுதிகளை அவதானியுங்கள்.



அதில், பதிவுகளை இணைப்பதற்கு ப்ளொக் என்கின்ற பகுதியில் சொடுக்குங்கள். குறித்த பக்கம் கிடைத்தவுடன் அதில், உங்களது வலைப்பதிவின் முகவரி தெரியும்.



அதே பக்கத்தில் வலது பக்கத்தில் பச்சை நிறத்தில் இருக்கின்ற sync என்கின்ற பகுதியை சொடுக்குவதன் மூலம் உங்களின் அனைத்து பதிவுகளை யாழ்தேவி.கொம் உள்வாங்கிக்கொள்ளும். அதன்பின்னர் புதிதாக இணைக்கப்பட்டது எது, புதுப்பிக்கப்பட்டது எது என்பதை அந்தப்பக்கம் காட்டும்.

இப்பொழுது உங்களது பதிவுகள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு விட்டன. உங்கள் பதிவுக்கு அருகில் காணப்படும் மணல் கடிகாரம் பதிவு இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் முகப்பில் வெளியிடப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அந்த மணல்கடிகார இணைப்பில் சொடுக்குவதன் மூலம் உங்கள் பதிவுக்கான நாட்டையும், வகையினையும் தெரிந்து Move online என்கிற பொத்தானை அழுத்துவதன் மூலம் பதிவை யாழ்தேவி முகப்புப் பக்கத்தில் வெளியிட முடியும்.









Friday, June 18, 2010

'வணக்கம்" புதிய தமிழ் இதழ்.(இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள்)


'வணக்கம்", புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் எதுவும் இங்கிருந்து இப்படித்தான் தொடங்கவேண்டும்.

தொடங்கியிருக்கிறார்கள் எங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் 'வணக்கம்" என்ற தலைப்புடன்.
'வணக்கம்" என்ற தமிழ் இதழ் விரைவில் இலங்கைப்பல்கலைக்கழக மாணவர்களினால் வெளியிடப்பட இருக்கிறது.

உலகத்தில் நடக்கம் நிகழ்வுகள், எங்கள் மாணவர்களுக்கு உத்வேகம் ஊட்டக்கூடிய தகவல்தொகுப்புக்கள் , பேட்டிகள் , கட்டுரைகள் என்று சகலகோணங்களிலும் புகுந்து புறப்பட இருக்கிறது 'வணக்கம்" இதழ்.

உங்கள் படைப்புக்களை submissions@yaaldevi.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.


யாழ்தேவி நிர்வாகக்குழு

-can't wait to see the changes,lets do something, but together, in a right way.

Sunday, May 2, 2010

"யாத்ரா 2010".முதலாவது இணையத்தமிழ் மாநாடு

இலங்கைப்பதிவர்கள் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் ,பேராசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள் , அதிபர்கள் , கல்விமான்களுடன் , எழுதப்படிக்கத்தெரிந்த அனைவருடனும் யாழ்தேவி இணைந்து நடாத்தும் "யாத்ரா".முதலாவது இணையத்தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் வரும் வைகாசிமாதம் 16ம் திகதி (May 16 sunday)ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

பத்திரிகையில் பொருந்தாத செய்தி ஒன்று வெளியாகும் போது அதை பார்த்துத் தாக்கமடைபவரின் உணர்வுவெளிப்பாடுகள் அவருடன் கூடச்சேர்ந்து பத்திரிகைவாசிக்கும் ஒரு மூன்று பேருடன் நின்றுபோய்விடுகிறது.அல்லது அவருடைய குடும்பஅங்கத்தவர்களுடன் அந்தத்தாக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது.வானொலியிலும் தொலைக்காட்சியின் தாக்கம் கூட அவ்வாறே.ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவற்றுக்கான தாக்கம் இருக்கிறது.


இணையம் அவ்வாறல்ல.இணையத்தில் பரப்பப்படும் செய்;திகள் நீண்ட ஆயுள் கொண்டவை.இலேசில் மரணித்துப்போகா.அவை பிழையான செய்திகளாக இருந்தாலும் கூட.இணையத்தின் பலம் அத்தகையது.இணையத்துடன் இணைந்த ஊடகங்களும் நீண்ட ஆயுள் கொண்டவையே.




• வலைப்பூக்கள் சமூக இணைப்புத்தளங்களின் வருகைக்குப்பின்னரான இணைய ஊடகங்களினால் சமூகத்தின் பால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களின் வலிமை பற்றியும்

• அரசியல் கலாச்சார நடவடிக்கைகளில் எவ்வாறு பங்களிக்கப்போகின்றன ஏனைய நாடுகளில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்தின

• இன்றய தமிழ்ச்சமூகங்களின் உலகநடப்புச்சம்பந்தமான அறிவு முன்னேற்றத்திற்கு இந்த ஊடகங்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்

• வலைப்பூக்களின் சாதக பாதகங்கள்

• வலைப்பதிவர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச்சிக்கல்கள்

• இலங்கை வலைப்பதிவர்கள்

• இலங்கை வலைப்பதிவர்களின் கல்வி மற்றும் துறைப்பின்னணிகள் எவ்வாறு துறைசார்ந்த ஆக்கங்களுக்கு உதவுகின்றன

• வருங்காலத்தில் பதிவுலகம்

• பதிவர் சமூகங்கள்

• பாடசாலைகளில் வலைப்பூஎழுத்துக்களை ஊக்குவித்தல்

• இரண்டாயிரத்து ஒன்பது இரண்டாயிரத்துப் பத்து மிகச்சிறந்த பத்துப்பதிவுகள்

• சிறந்த ஆக்கங்களை படைத்த மூன்று இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள்

• இந்தியப்பதிவுலம்

போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

வலைப்பூக்களில் மிகச்சிறந்த படைப்புக்களை தெரிந்து வெளியிடப்படும் "யாத்திரா 2010" வெளியீடும் இடம் பெறும்.


விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் பிரசுரிக்கப்படும்.யாத்ரா என்ற இந்த மாநாடு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறும்

அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

மேலும் பார்க்க

Tuesday, October 6, 2009

யாழ்தேவி இணையும் ஊடகங்கள்

அறிக்கை
யாழ்தேவி நிர்வாகக்குழு பதிவர்கள் மற்றும் வாசகர்கSக்கு மற்றும் யாழ்தேவி திரட்டியில் ஈடுபட்டு உழைக்கும் அனைவருக்கும் மற்றும் இளைங்கலைஞர்வட்ட உறுப்பினர்கSக்கும் இந்த நற்செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

யாழ்தேவிஇணையம் தன்னுடைய சேவைஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது.இணைய ஊடகத்தை மற்றய ஊடகங்கSக்கும் மற்றய ஊடகப்பாவனையாளர்களை இணையத்துக்கும் அறிமுகப்படுத்தும் சவாலான பாதையில் குறிப்பிட்டளவு வெற்றிகண்டிருக்கிறோம்.

இலங்கையில்வெளியாகும் பாரிய வாசகர்வட்டத்தைக்கொண்ட 'தினக்குரல்' யாழ்தேவியுடன் கைகோர்க்க முன்வந்துள்ளது.இனி ஒவ்வொரு ஞhயிறு தினக்குரலிலும் யாழ்தேவிக்கான பக்கத்தில் எங்கள் பதிவர்களின் பதிவுகள் மின்னப்போகின்றன.அத்துடன் இலங்கையில் வெளியாகும் 'இருக்கிறம்" இருவார இதழும் யாழ்தேவிக்காக பக்கமொன்றை ஒதுக்கவும் யாழ்தேவி நட்சத்திரப்பதிவரின் தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம்ஒன்றை பிரசுரிக்கவும் முன்வந்துள்ளது.மீடியாக்களுக்காக யாழ்தேவியின் media.yaaldevi.com என்ற பகுதி புதிய பக்கம் விரைவில் அறிமுகமாகும்.

பெ.மயூரன்(வந்தியத்தேவன்)
யாழ்தேவி நிர்வாகக்குழு



ஆசிரியர்,
ஞயிறு தினக்குரல்.

வணக்கம்,

‘யாழ்தேவி’ திரட்டி, இணைய எழுத்தாளர்கள் மற்றும் தங்களின் (தினக்குரலின்) ஒத்துழைப்பு சம்பந்தமாக தங்கழுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆக்கபூர்வமான சந்திப்பின் மகிழ்ச்சியுடன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். யாழ்தேவியுடன் தினக்குரல் இணைந்து இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களை பத்திரிகைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் ஆரோக்கியமான செயற்பாட்டுக்கு துணை நிற்க உறுதி அளித்தமைக்கு யாழ்தேவி சார்பிலும், அதன் நான்காயிரத்து சொச்சம் வாசகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு அச்சு ஊடகத்தின் துணையில்லாமல் இணைய ஊடகத்தையும், அதில் எழுதுபவர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது மக்கழுடன் இணைக்க முடியாதென்பதை புரிந்துகொண்டு எங்களுடன் கைகோர்த்தமைக்கு தங்களுக்கும், தினக்குரலுக்கும் நன்றிகள்.

யாழ்தேவி திரட்டி அதாவது நாங்கள் செய்யவேண்டியதை இந்தக்கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன். தினக்குரல் யாழ்தேவிக்கு ஒதுக்க முன்வந்த அரைப்பக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை கீழே நிரல்படுத்தியிருக்கிறேன். வலைப்பூக்கள்- இணையத்தில் எம்மவர் என்ற தலைப்பின்கீழ் யாழ்தேவி நட்சத்திர பதிவரின் புகைப்படம், நட்சத்திரம் பற்றிய சிறிய அறிமுகம், அவருடைய பதிவுகள், குறித்த வாரத்தில் யாழ்தேவியில் பதியப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு, யாழ்தேவியினால சிறந்த ஆக்கமாக தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம் ஒன்று. மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றும் பதிவர்களை மேலும் எழுதத்தூண்டுவதாகவும், புதியவர்களை வலைப்பூக்கள் பக்கம் இழுத்து வரக்கூடியதாக காத்திரமானதாகவும், இளைமையானதாகவும் பிரசுரிக்கப்படல் வேண்டும். எங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

Friday, October 2, 2009

யாழ்தேவி எழுத்துருமாற்றி

யாழ்தேவி எழுத்துருமாற்றியின் முதலாவது பதிப்பு 
இளம்கலைஞர்வட்டத்தினால் இன்று இரண்டாம் திகதி ஒக்டோபர் 
மாதம் இரண்டாயிரத்து ஒன்பதில் வெளியிடப்பட்டுள்ளது.

Monday, September 28, 2009

எஸ் எம் எஸ் புளொக்கிங்கை உங்கள் வலைப்பூவிலேயே இணைக்கிறது யாழ்தேவி.

(இந்த வசதியை அனுபவிப்பதற்கு நீங்கள் யாழ்தேவி மொபைல் புளொக்கர் அமைப்பை சரியாக செய்திருக்க வேண்டும். See this )

1.நீங்கள் உங்கள் தொலைபேசியின் மூலமாகவே உங்கள் சிறிய பதிவுகளைச்செய்யலாம்.
உங்கள் கடவுச்சொல்லைலைக்கொடுத்து யாழ்தேவியின் உங்கள் பகுதிக்குச்செல்லுங்கள்.

அங்கே 'எஸ் எம் எஸ் அப்டேற் உங்கள் வலைப்பூவில் என்ற பகுதி காணப்படும்.அதில் உள்ள எச் ரி எம் எல் நிரல்களை முழுவதுமாக கொப்பி செய்து கொள்ளுங்கள்.

2.உங்கள் புளொக்கின் கணக்கிற்குள் நுளைந்து டெம்ளெற்றை எடிற்செய்யும் பகுதிக்குச் செல்லுங்கள்

3.'அட் எ கஜட்' என்ற இணைப்பில் கிளிக்கி திறக்கும் விண்டோவில் 'வலைப்பூ எஸ் எம் எஸ் அப்டேற்;;' என்று தலைப்பிட்டு (உங்கள் விருப்பப்படி தலைப்பிடலாம்) பெரிய பெட்டியில் நீங்கள் கொப்பிசெய்த எச் டி எம் எல் நிரல்களை பேஸ்ட் செய்யுங்கள்.

4.சேமித்துவிட்டு வெளியேறுங்கள்.

5.உங்கள் வலைப்பூவின் முகப்பில் உங்கள் எஸ் எம் எஸ் அப்டேற்றுகள் தெரிய வேண்டும்

6.உயரம் தெரிய வேண்டிய அப்டேற்றுக்களின் எண்ணிக்கை என்பவற்றை நீங்கள் எச் டி எம் எல் நிரல்களை திருத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்


Friday, July 24, 2009

நானும் மொபைல் றிப்போர்ட்டர் ஆகலாமா?


ஏன் இல்லை.நீங்கள் யாழ்தேவியில் பதியப்பட்ட பதிவராக இருந்தால் இது சாத்தியம்.உடனடியாக உங்கள் கணக்குப்பகுதிக்குச்சென்று உங்கள் மொபைல்இலக்கத்தை சர்வதேசவடிவத்தில் மாற்றுங்கள்.

உதாரணம்:

சாதாரண மொபைல் இலக்கம்: 0777699776 இதனை 94777699776 என்று மாற்றுங்கள்.கவனிக்க, இங்கு 94 சேர்க்கப்பட்டுள்ளது 0 விலக்கப்பட்டுள்ளது.
நீங்கள் லண்டனில் இருந்தால் 94 அல்லாமல் அது 44 ஆக இருக்கும்

அப்டேற்புறொபைல் என்ற பொத்தானை அழுத்தி கணக்கைசேமித்து வெளியேறுங்கள்.உங்கள் போனில் அனுப்பவேண்டிய செய்தியை உருவாக்கி அதனை 94114937071 என்ற இலக்கத்திற்கு அனுப்புங்கள்.யாழ்தேவி முகப்பில் உங்கள் செய்தி வருகிறதா என்று பாருங்கள்.நீங்களும் மொபைல் றிப்போர்ட்டர்தான். Enjoy :)